×

விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டி, டிச.18:  வாடிப்பட்டியில் காஸ் விலை உயர்வை கண்டித்து காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர் இந்தியாவில் கடந்த 30 நாட்களில் இரண்டு முறை வீடுகளுக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக கொட்டு மேளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டது.

வாடிப்பட்டி காவல் நிலையம் அருகில் இருந்து கிளம்பிய ஊர்வலம் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன் துவக்கி வைத்தார். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்