×

குஜிலியம்பாறையில் சிபிஎஸ் திட்டத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை, டிச. 18: குஜிலியம்பாறையில் வட்டார ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் அருள்செழியன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பணி நியமன வயது 40 ஆக குறைத்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும்.

2019 ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்டோர் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு உதவி நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் வீரபாபு, பானுமதி, சிவராணி உள்ளிட் 90க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags : Teachers ,CBS ,
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...