×

மது வாங்கி தர மறுத்ததால் கூலி தொழிலாளி அடித்து கொலை: 2 பேர் கைது

தண்டையார்பேட்டை, டிச.18: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (21). பெரம்பூரில் தங்கி, பூக்கடை பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவர், கடந்த 15ம் தேதி இரவு பூக்கடை எத்திராஜ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி, அருகில் அமர்ந்து குடித்துக்கொண்டு இருந்தார்.அப்போது, அதே பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வரும் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளர்கள் கலையரசன் (22), ஆனந்த் (20) ஆகிய 2 பேர் அங்கு வந்து, தமீம் அன்சாரியிடம் மது வாங்கி தருமாறு தகராறு செய்துள்ளனர்.

அவர் மறுத்ததால், செல்போனை பிடுங்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தமீம் அன்சாரி, அவர்களை தாக்கியுள்ளார். பதிலுக்கு 2 பேரும் சேர்ந்து தமீம் அன்சாரியை தாக்கி, கீழே தள்ளி விட்டுள்ளனர். அதில், தமீம் அன்சாரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தப்பினர்.

தகவலறிந்து வந்த பூக்கடை போலீசார், தமீம் அன்சாரியை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கலையரசன், ஆனந்த் ஆகிய இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.

Tags : Wage worker ,death ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...