திருப்பூர், டிச.18: பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஓராண்டுக்கு மேலாக வழங்கப்படாத ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்தவர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும். போராட்டங்களில் பங்கேற்றதால் இடமாற்றம் உள்ளிட்ட ஊழியர்களின் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பி.எஸ்.என்.எல். சேவையை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன.இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட அமைப்புச் செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட உதவித் தலைவர் காந்தி, தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில உதவிச் செயலாளர் முத்துக்குமார், ஓய்வூதியர் சங்க மாநில உதவித் தலைவர் சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.