×

தாராபுரத்தில் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தாராபுரம், டிச.18:   தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், மெழுகுப் பூச்சு செய்யப்பட்ட அட்டை டம்ளர்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து தாராபுரம் நகராட்சி நகர்நல அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 2 நாளாக நகர் முழுவதும் ஒரே நேரத்தில் மூன்று பிரிவாகப் பிரிந்து அதிரடி சோதனை நடத்தினர்.
மளிகை பொருட்கள் விற்பனை கடைகள், மொத்த வியாபாரிகளின் கடைகள் மற்றும் அவர்களது கிடங்குகளில் இந்த சோதனை நடந்தது. அப்போது தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த உடுமலை சாலை தர்மராஜ் தங்கவேல் என்.என். பேட்டை வீதி பாலாஜி, சுதிர்ராஜ் ஆறுமுகம் உட்பட 8 நபர்களுக்கு ரூ 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Tarapur ,
× RELATED தாராபுரத்தில் பிரதமர் பிரசாரத்தின்...