×

திருக்குறுங்குடி அருகே திருட்டை தட்டிக்கேட்ட வியாபாரி மீது தாக்குதல்

களக்காடு, டிச. 18: திருக்குறுங்குடி அருகே ராஜபுதூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர்  இந்திரபாண்டி (65). இவர் அப்பகுதியில் கடை வைத்து பப்பாளி, இளநீர், நெல்லிக்காய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று விற்பனையான பணத்தை இவர் தனது கடையில் வைத்திருந்ததை அதே ஊரைச் சேர்ந்த வேல் மகன் மணி என்பவர் திருடிச் சென்றார். இதுகுறித்து தெரியவந்ததும் இதை இந்திரபாண்டி தட்டக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணி, இந்திரபாண்டியை அவதூறாகப் பேசியதோடு சரமாரியாகத் தாக்கினார். இதில் காயமடைந்த இந்திரபாண்டி, திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் திருக்குறுங்குடி எஸ்ஐ மாரியப்பன் மற்றும் போலீசார், தாக்குதல் நடத்திய மணி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thirukurungudi ,
× RELATED திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!