×

சுரண்டை வட்டாரத்தில் ரூ.1.64 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ துவக்கிவைத்தார்

சுரண்டை, டிச. 18:  சுரண்டை அருகே அச்சன்குட்டம் ஊராட்சி லட்சுமிபுரத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சத்தில்  பேவர் பிளாக் சாலைப் பணியை தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ துவக்கிவைத்தார். இதே போல் அச்சன் குட்டத்தில்,  தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 9.50 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்துவைத்த அவர், கருவந்தா ஊராட்சி, சோலை சேரியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கலையரங்கை திறந்துவைத்தார். தொடர்ந்து ரூ.3.90 லட்சத்தில்  பேவர் பிளாக் சாலை, ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஜேஜேஎம் திட்டத்தின் கீழ் சோலைசேரி, கருவந்தாவில் சுமார் 2 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டப்பணிகளையும் துவக்கிவைத்தார்.  நிகழ்ச்சிகளில் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், எம்ஜிஆர் மன்றச் செயலாளர் காத்தவராயன்,  ஆலங்குளம் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்எச்எம் பாண்டியன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் இருளப்பன், அந்தோனி, நெல் வீரபாண்டியன், வீராணம் ஷேக், தங்கப்பாண்டியன், அச்சங்குன்றம் வெள்ளைத்துரை, குத்தாலிங்கம், கருவந்தா தானியேல், தாய்க்குலம் கருப்பசாமி பாண்டியன், எபன் குணசீலன்,  ஐயாத்துரை,  லட்சுமிபுரம் கிளைச் செயலாளர் ராமச்சந்திரன், சுரண்டை கடற்கரை நாடார், ஆலங்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சுமதி, மேற்பார்வையாளர்கள் ஆனந்தவடிவு, தனம், அரசு ஒப்பந்ததாரர்கள் குத்தாலிங்கம், சுப்பையா,  சோலைசேரி கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : area ,Selva Mohandas Pandian MLA ,Surandai ,
× RELATED மின்னல் தாக்கி மாணவர் பலி