×

கல்லணையாற்று பாலப்பகுதியில் உடைப்பு ஏற்பட்ட கரைகளை உடனே பலப்படுத்த வலியுறுத்தல்

வத்திராயிருப்பு, டிச. 17:   வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. சதுரகிரியில் மழை பெய்தால் மழைநீர், ஓடைகள் வழியாக பெருக்கெடுத்து வத்திராயிருப்பு- மகாராஜபுரம் இடையே கல்லணையாற்று பாலத்தின் அடியே ஆலங்குளம் கண்மாய்க்கு செல்லும்.ஆனால், இந்த வழியில் உள்ள ஆற்றில் முட்செடிகள் அதிக அளவு முளைத்துள்ளது. அதனை அப்புறப்படுத்துவதோடு கல்லணையாற்று பாலத்திலிருந்து தெற்கு பகுதியில் உள்ள கரைகள் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
 
கல்லணையாற்று பாலம் வழியாக அளவுக்கதிகமான தண்ணீர் வரும்போது அருகில் உள்ள ஆகாசம்பட்டி பகுதியில் தண்ணீர் சூழக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் மந்தித்தோப்பு பகுதியில் இருந்து முட்செடிகளை அகற்றுவதோடு இருபுறமும் உள்ள கரைகளை ஆலங்குளம் கண்மாய் வரை பலப்படுத்த சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : banks ,bridge ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...