பெரியகுளம், டிச. 17: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீ்ழ் காய்கறி அறிவியல் துறை சார்பில் முருங்கையில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் ஆறுமுகம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முகாமில் காய், இலை, விதை உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள், முருங்கையில் மதிப்புக்கூட்டுதலுக்கான வழிமுறைகள், வணிக ரீதியான வாய்ப்புகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.