×

காளையார்கோவில் பகுதியில் இரவில் அச்சுறுத்தும் கொள்ளை கும்பல்

காளையார்கோவில், டிச.17: காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன். இவரது மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரி ஆகியோரை ஜூலை 14ம் தேதி மர்ம நபர்கள் ராடு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு 75 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 5 மாதங்களாகியும் இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்காத நிலையில் அக்.10ம் தேதி முடுக்கூரணி அருகேயுள்ள ஆண்டிச்சியூரணியில் பன்னீர்செல்வம் என்பவர் வீட்டிற்கு கம்பியுடன் நுழைந்த 2 மர்ம நபர்கள், அவரை மிரட்டி 10 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இதேபோல் நவ.23ம் தேதி காலை ஆண்டிச்சியூரணி அருகேயுள்ள புலியடித்தம்பத்தில் பன்னீர்செல்வம் வீட்டிற்கு ராடு கம்பியுடன் 2 மர்ம நபர்கள் சென்றனர். அங்கிருந்த அவரது மனைவி, மகளை மிரட்டி நகைகளை பறிக்க முயன்றனர். அவர்கள் கூச்சலிட்டத்தால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.தொடர்ந்து இதேபோல் சாலையோரங்களில் இருக்கும் வீடுகளுக்கு செல்லும் கொள்ளையர்கள் ராடு கம்பியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து வருகின்றனர்.

இதுவரை காளையார்கோவில் பகுதியில் நடந்த மூன்று சம்பவங்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. இதனால் சாலையோர வீடுகளில் வசிப்போர் அச்சத்தில் உள்ளனர். போலீசார் விரைந்து செயல்பட்டு காளையார்கோவில் பகுதியை கலக்கி வரும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : robbery gang ,Kaliningrad ,area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...