×

பாத்ரூமில் அழுகிய நிலையில் தனிமை வாலிபர் உடல் மீட்பு

திருச்சி, டிச.17: திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப நகரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சகாயசுந்தரம்(37). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். அடிக்கடி தந்தை மகனுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தால் மகனை வீட்டில் விட்டு விட்டு பரமசிவம் வெளியேறிவிடுவார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு சகாயசுந்தரம் வீட்டில் இருந்து வந்தார். இதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மகனை விட்டுவிட்டு பரமசிவம் வெளியேறிவிட்டார். இதில் நேற்று முன்தினம் சகாயசுந்தரம் வீடு உள்புறம் தாழிடப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனை போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்த போது பாத்ருமில் சகாயசுந்தரம் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Recovery ,teenager ,state ,bathroom ,
× RELATED முள்ளக்காடு அருகே கோயில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்‘