×

25ம்தேதி பரமபதவாசல் திறப்பு மாடி வீட்டில் தீ: பல லட்சம் பொருட்கள் சேதம்

நீடாமங்கலம், டிச.17: கொரடாச்சேரி அருகே மாடி வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்த அத்திக்கடை கீழத்தெருவை சேர்ந்த தாஜ்தீன் மகன் இதயதுல்லா(45). இவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு அத்திக்கடையில் மிகப்பெரிய மாடி வீடு உள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும்போது, அனைத்து வசதியும் உள்ள இந்த வீட்டில் தங்கி செல்வது வழக்கமாம். இந்த வீட்டில் மின்சாரம் இல்லாததால் சோலார் பேனல் பயன்படுத்தி மின்விளக்கு எரியவிடப்பட்டிருந்தது. வீட்டை இவரது உறவினர் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 11 மணியளவில் இந்த மாடி வீட்சின் உட்புறத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். திருவாரூர் டிஎஸ்பி தினேஷ்குமார், கொரடாச்சேரி இன்ஸ் பெக்டர் சுதா மற்றும் போலீசார் தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்த பிரிட்ஜ், பீரோ, ஷோபா உள்ளிட்ட லட்சக்கனக்கான ரூபாய் மதிப்பில் பொருள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

Tags : Millions ,Paramatman Gate Opening Floor House Fire ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...