×

தூய்மை காவலர்களும் பங்கேற்பு தொடர் மழையால் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர், டிச.17: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் விவசாய சங்க கூட்டமைப்பினர் கடந்த 14ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தொடர் காத்திருப்பு போராட்டத்தினை துவக்கினர். இந்நிலையில் நேற்று 3வது நாளாக இப்போராட்டமானது நடைபெற வேண்டிய நிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை நேற்று காலை வரை தொடர்ந்து அடைமழையாக பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நாகை மற்றும் தஞ்சை மாவட்ட கூட்டமைப்பினருடன் கலந்து பேசி பின்னர் ஒரு தேதியில் போராட்டம் நடைபெறும் என்றும் திருவாரூர் போராட்ட குழுவின் தலைவர் மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

Tags : Purity guards ,protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...