×

இருதரப்பினர் மோதல் வழக்கில் ஒருவர் கைது

ஒரத்தநாடு, டிச. 17: ஒரத்தநாடு அடுத்த வாட்டாத்திக்கோட்டை நெய்வேலியில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வடிவேல் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (45) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : clash ,
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்