கும்பகோணம், டிச. 17: கும்பகோணத்தில் பெரும்பாண்டி புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர்பவனி நடந்தது. கும்பகோணம் பெரும்பாண்டிமாதா கோவில் தெருவில் உள்ள புனித பெரியநாயகி அன்னை பேராலயத்தில் தேர்பவனி திருவிழா நடந்தது. முதல்நாள் நிகழ்ச்சியாக சிறப்பு ஜெபமாலை மற்றும் திருப்பலி தொடங்கி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று அன்னையின் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.