கும்பகோணம், டிச. 17: கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் நூரி அம்மாள் தர்கா கந்தூரி விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நூரி அம்மாள் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நகர் முழுவதும் சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் தர்கா நிர்வாகி ஜெகபர் அலி தலைமையில் ஜமாத்தார்கள் ஆசாத் அலி, நிஜாம் மைதீன் முன்னிலையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.