×

புதுகை மருத்துவமனையில் நெகிழ்ச்சி பேராம்பூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை, டிச.17: புதுக்கோட்டை மாவட்டம் பேராம்பூர் அருகே உள்ள சாத்தி வயலை சேர்ந்தவர் கோபால்(46). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றார். சாத்திவயலில் கோபால் தாய் சின்னப்பிள்ளை தங்கி உள்ளார். இந்நிலையில் கோபால் தாய் சின்னப்பிள்ளை வீட்டை பூட்டிவிட்டு நூறு நாள் வேலைக்கு சென்றுள்ளார். அந்த சமயம் பார்த்து மர்ம நபர்கள் வீட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : house ,Flexi Perambur ,Budugai Hospital ,jewelery ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்