×

வேளாண் சட்டத்தை கண்டித்து மமகவினர் ரயில் நிலையத்தை முற்றுகை

நாகை,டிச.17: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து நாகை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 75 பேரை போலீசார் கைது செய்தனர். வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் நாகை ரயில் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். மாநில விவசாய அணி பொருளாளர் இப்ராகிம், மாவட்ட செயலாளர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தார். மத்திய அரசு வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டில்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி நாகை ரயில்வே ஸ்டேசனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பிய 75 பேரை டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Tags : Mamakavinar ,railway station ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட...