×

செந்தில்பாலாஜி பேட்டி பணி வழங்கி வாழ்வை காக்க வேண்டும் வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல்வரிடம் கோரிக்கை

கரூர், டிச. 17: கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதல்வரிடம் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் (90 மதிப்பெண்களுக்கு மேல்) பெற்றோம். வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்து பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகிறோம்.தங்களின் அரசு இதனை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மகிழ்ச்சியடைந்த நாங்கள் பாதிக்கப்பட்ட எங்களுக்கு தீர்வு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். பணி வாய்ப்பை இழந்த எங்களுக்கு பணியை வழங்கி வாழ்வை காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : teachers ,
× RELATED பொது மாறுதல் கவுன்சலிங் 82 ஆயிரம்...