×

மக்கள் எதிர்பார்ப்பு கரூர் ராயனூர் சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம்: அகற்ற கோரிக்கை

கரூர், டிச. 17: கரூர் ராயனூர் சாலையில் கொட்டப்படும் சில கழிவுகள் காரணமாக துர்நாற்றம் ஏற்படுவதால் பகுதியினர் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். கரூரில் இருந்து ராயனு£ர் வழியாக திண்டுக்கல், பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனூர் வழியாக செல்கின்றனர். இந்நிலையில், ராயனூர் சாலை குறிப்பிட்ட தூரம் காட்டுப்பகுதியாக உள்ளது.இதனால், இரவு நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் தேவையற்ற கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால், கடும் துர்நாற்றம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து பார்வையிட்டு தேவையற்ற கழிவுகள் கொட்டப்படுவதை பார்வையிட்டு சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : removal ,Karur Rayanoor Road ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...