×

பணம் கேட்டு தராததால் மாமியார் மீது தாக்குதல் மருமகன் உட்பட 3 பேர் கைது

சேந்தமங்கலம், டிச.17: சேந்தமங்கலம் அடுத்த  ஜங்களாபுரத்தை சேர்ந்தவர் பிரியா(45). இவர் தனது மகள் சௌமியாவை, திருப்பூரை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார்(30)  என்பவருக்கு, கடந்தாண்டு   திருமணம் செய்து கொடுத்துள்ளார். தற்போது சௌமியா கர்ப்பிணியாக  உள்ளார். இந்நிலையில் வினோத்குமார், தனது மனைவிக்கு மருத்துவ செலவு செய்வதற்காக, மாமியார்  பிரியாவிடம் ₹50 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தர மறுத்துவிட்டார்.இதனால்  ஆத்திரமடைந்த வினோத்குமார், நேற்று முன்தினம் தனது உறவினர்களான சீனிவாசன்(45), அவரது மனைவி  ஜெயந்தி(30), மணிகண்டன்(48) ஆகியோரை மாமியார் வீட்டிற்கு  அழைத்து சென்று, மருத்துவ செலவுக்கு  பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும், பணம் தர மறுத்த பிரியாவை சராமாரியாக  தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிரியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு,  சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின்  பேரில், சேந்தமங்கலம் எஸ்ஐ சந்திரன் வழக்குபதிவு செய்து, வினோத்குமார், சீனிவாசன், மணிகண்டன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தார்.

Tags : mother-in-law ,
× RELATED சொத்துக்காக மாமனார், கணவரை கொன்றதுடன்...