×

ஆலங்குளத்தில் நாளை ஜிஎஸ் கிராண்ட் திறப்பு விழா

ஆலங்குளம், டிச. 17: ஆலங்குளத்தில் திருநெல்வேலி - தென்காசி மெயின்ரோட்டில் பேருந்து நிலையம் கீழ்புறம்  மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ் கிராண்ட் திறப்பு விழா, நாளை (18ம் தேதி) காலை நடைபெறுகிறது.  இங்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், செல்போன்கள், பர்னிச்சர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தனித்தனி பிரிவுகளாகவும், வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இக்கடை அமைக்கப்பட்டுள்ளது.திறப்பு விழாவிற்கு சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் டேவிட் நாடார் தலைமை வகிக்கிறார். சேகர குரு  வில்சன் ஜெபம் செய்கிறார். ஜிஎஸ் கிராண்ட் நிறுவனர் ஜிஎஸ்.செல்வம் வரவேற்கிறார். தங்க நகைகள், செல்போன் விற்பனை பிரிவு தரை தளத்தை பூங்கோதை எம்எல்ஏவும், வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்ட முதல் தளத்தை தென்காசி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் வைகுண்டராஜாவும், மரக்கட்டில், மெத்தை உட்பட பல்வேறு  பொருட்களை கொண்ட 2வது தளத்தை நகர வணிகர் சங்க தலைவர் மைலேறியும், பர்னிச்சர்கள் கொண்ட 3வது தளத்தை ஸ்டஅக் ஹைடெக் பள்ளி நிறுவனர் முருகனும் திறந்து வைக்கின்றனர்.
முதல் விற்பனையை தாத்தா சோப் செல்வபாண்டி துவக்கி வைக்கிறார். கனரா வங்கி  ராஜசேகரன் முதல் விற்பனையை பெறுகிறார். ஜிஎஸ்.பிரான்சிஸ் நன்றி கூறுகிறார்.

Tags : GS Grand Opening Ceremony ,Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி