×

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 எஸ்ஐகள் பணியிடமாற்றம்

தூத்துக்குடி, டிச. 17:தூத்துக்குடி மாவட்டத்தில் 6 எஸ்ஐகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்த சங்கர். ஓட்டப்பிடாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறையில் பணியாற்றி வந்த எஸ்ஐ வேல்ராஜ், நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வந்த எஸ்ஐ சிவக்குமார் தென்பாகம் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுபோல், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எபனேசர் சிப்காட் காவல் நிலையத்திற்கும், சிப்காட்டில் பணியாற்றி வந்த பாலன், புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிற்சி நிறைவு செய்துள்ள எஸ்ஐ முனியசாமி, சூரங்குடி காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்பி ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார்.

Tags : SIs ,Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...