×

விருதுநகர், சாத்தூரில் கமல்ஹாசன் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

விருதுநகர், டிச.16: விருதுநகர், சாத்தூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலை பிஆர்சி பணிமனை முன்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.  அங்கிருந்து கச்சேரி ரோடு, மாரியம்மன் கோவில் வழியாக வந்து தேசபந்து மைதானம் அருகில் மூளிப்பட்டி அரண்மணை முன்பாக பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் சார்பில் போலீஸ் அனுமதி கோரியிருந்தனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் கமல் பேசுவார் என காத்திருந்தனர். ஆனால் மைக் வைத்து பேச போலீசார் அனுமதி மறுத்தனர். இதை தொடர்ந்து கமல் பேசாமல் வணக்கம் தெரிவித்தபடி சென்றார். இதை தொடர்ந்து சிவகாசியில் போஸ் அரங்கில் பட்டாசு தொழிலாளர்களையும், ஆலை உரிமையாளர்களையும் சந்தித்து பேசினார். அங்கிருந்து சாத்தூர் முக்குராந்தல் பகுதியிலும் பேச போலீசார் அனுமதி மறுத்தனர்.எனவே கமல் பேசாமல் தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி சென்றார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Tags : campaign ,Kamal Haasan ,Sattur ,Virudhunagar ,
× RELATED சொல்லிட்டாங்க…