×

ராஜபாளையத்தில் டிரான்ஸ்பார்மர் அடியில் குவிக்கப்படும் குப்பை

ராஜபாளையம், டிச.16: ராஜபாளையம் நகர் பகுதியில் டிரான்ஸ்பர்மர் அருகே எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் தீ விபத்து அபாயம் நிலவுகிறது. ராஜபாளையம் நகர் பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகளை டிரான்ஸ்பார்மர்கள் அருகே கொட்டி வருகின்றனர். இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை தடுக்கும் வகையில் நகரில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ராஜபாளையம் நகர் பகுதிகளில் ஏற்படும் குப்பைகளை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அகற்றுவது இல்லை. பொதுமக்களும் எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இடங்களில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். உயர் மின்னழுத்தம் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொட்டுவதை மின்சார துறையினரும் கண்டுகொள்வதில்லை.

மேலும் நகராட்சி நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. நகர் பகுதியில் பலரும் அலட்சியத்துடன் நடந்து கொள்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே போதிய நடவடிக்கை எடுத்து பெரும் ஆபத்தை தடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளனர். 

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா