×

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கையில் தொடர் போராட்டம்

சிவகங்கை, டிச. 16: வேளா ண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று முன்தினத்தில் இருந்து சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.


மீண்டும் நேற்று காலை சிவகங்கை அரண்மனைவாசல் முன் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையோரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். ஆனால் போராட்டம் நடத்த அனுமதியில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் அனைவரையும் சிவகங்கை டவுன் போலீசார் கைது செய்தனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமை வகித்தார்.

Tags : Sivagangai ,Delhi ,
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்