×

சின்னாளபட்டியில் பஸ் ஸ்டாப்களால் போக்குவரத்திற்கு இடையூறு: இடம் மாற்ற கோரிக்கை

சின்னாளபட்டி, டிச. 16: சின்னாளபட்டி பிரிவு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னாளபட்டி பிரிவு பகுதியில் தேசிய நான்குவழி சாலை மேம்பாலம் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக சின்னாளபட்டிக்கு வரும் வாகனங்கள் இப்பாலத்தின் கிழக்கு பகுதி வழியாக உள்ளே நுழைந்து மேற்கு புறம் செல்கின்றன.

இதுபோல மதுரையில் இருந்து சின்னாளபட்டி பிரிவு வழியாக திண்டுக்கல் செல்லும் அரசு- தனியார் பேருந்துகள் பாலத்தின் மேற்கு பகுதியில் நிறுத்துகின்றனர்.இங்கு ஒரு பேருந்து நின்றால், அதன் பின்னால் வரும் மற்ற வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்ல வழியின்றி நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், மதுரையில் இருந்து சின்னாளபட்டிக்கு வரும் வாகனங்களை சின்னாளபட்டி பிரிவு பகுதியில் உள்ள வன்னார் சலவை துறை அருகே நிறுத்த வேண்டும். அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் அரசு- தனியார் பேருந்துகளை மேம்பாலம் நுழைவு வாயிலை தாண்டி 100 மீட்டர் தூரம் தள்ளி நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stops ,Chinnalapatti ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...