×

முற்றுகை முயற்சி

பொள்ளாச்சி, டிச. 16:  புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி கோவைரோடு மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் உள்ள  தனியார் வணிக நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம்  பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் மாலை  நடைபெற்றது. இதற்கு, தந்தை பெரியார் திராவிடர் கழக வெளியீட்டு செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

தமுமுக ஷேக்அப்துல்லா,  ஆதித்தமிழர் பேரவை கோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரபு , மஜக முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவர்கள் முன்னதாக, கோவைரோட்டிலிருந்து தனியார் நிறுவனம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின் ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம். டில்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டிக்கிறோம் உள்ளிட்ட பல்வேறுகோஷம் எழுப்பினர்.

Tags : siege ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...