×

காவிரி, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை, டிச.16: புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட காலக்கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுடுத்த வேண்டுமென ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் புதுக்கோட்டை வட்ட பேரவை கூட்டம் துணை தலைவர் ரெங்கசாமி தலைமையில் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டை விரிவுபடுத்தி அனைத்து வகை மருத்துவத்திற்கும் உச்சவரம்பின்றி அமுல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச பேருந்துப்பயண அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப்படியை ரூபாய் ஆயிரமாக உயர்த்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில்பேட்டைகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Cauvery ,implementation ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி