×

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்திற்கு எம்பிக்கு முறையான அழைப்பு இல்லை

புதுக்கோட்டை,டிச.16: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறும் கூட்டத்திற்கு முறைப்படி மாவட்ட நிர்வாகத்தால் தனக்கு தகவல் சொல்லப்படுவதில்லை என எம்பி நவாஸ்கனி குற்றச்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மேல ராஜவீதி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, அக்கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் எம்பியுமான அப்துல்ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியிடம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறும் எந்த ஒரு கூட்டத்திற்கும் தாங்கள் வருவதில்லை என நிருபர்கள் கேட்டதற்கு, தனக்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் முறைப்படி கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுவதில்லை. உடனடியாக நிகழ்ச்சியை வைத்துவிட்டு தகவல் சொல்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்போது, தகவல் கூறி இருந்தால் கட்டாயமாக கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன் என்று தெரிவித்தார்.

Tags : Rev. ,meeting ,office ,
× RELATED ஊதுபத்தியால் வந்தது வினை வீட்டில் தீப்பற்றி பணம் பொருட்கள் எரிந்து நாசம்