×

அடுத்த வாரம் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் திறக்கப்படும்

வேதாரண்யம், டிச.16: கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் அடுத்த வாரம் திறக்கப்படும் என்று தஞ்சை சரக வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.இந்த பசுமை மாறா காட்டில் மான், குதிரை, நரி, குரங்கு, பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதன் எதிர் புறம் பறவைகள் சரணாலயம் உள்ளது.இந்த பறவைகள் சரணாலயத்திற்கு செங்கால நாரை பூநாரை உள்ளிட்ட 247 வகையான பறவைகள் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆண்டுதோறும் வந்து செல்கின்றன. இந்நிலையில் வனவிலங்கு சரணாலயம் பறவைகள் சரணாலயம் கொரோனா பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.

இதனால் வனவிலங்கு சரணாலயத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்க ப்படாமல் பூட்டியே வைத்திருந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று தஞ்சை சரக வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் வனவிலங்கு சரணாலயத்தில் வந்து ஆய்வை மேற்கொண்டார். வன விலங்கு சரணாலயம் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: பரந்துவிரிந்த இந்த காட்டில் சுற்றுலாப்பயணிகள் நெருக்கடி இல்லாமல் செல்லலாம். இந்த பறவைகள் சரணாலயத்தை பார்ப்பதற்கு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்த வாரம் திறக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை உள்ளிட்ட பறவைகள் அதிக அளவில் வந்துள்ளதாகவும், இதனை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பார்த்து பயன்பெற வேண்டுமென தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வனச்சரகர்கள் குணசேகரன், அயூப் கான், வனவர் சதீஸ் குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

Tags : Kodiakkarai Wildlife Sanctuary ,
× RELATED கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு