×

கடலூர் மாவட்டத்தில் 8 துணை வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம் ஆட்சியர் உத்தரவு

கடலூர், டிச. 16: கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மாவட்டத்தில் உள்ள 8 துணை வட்டாட்சியர்களை நிர்வாக காரணங்களுக்காக நேற்று முன்தினம் பணி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி முன்னாள் தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வமணி காவல்துறை பயிற்சி முடிந்ததும் விருத்தாசலம் துணை வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் துணை வட்டாட்சியர் ராஜூ, நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி நிறுவன வடிப்பக அலுவலர் காவலர் பயிற்சி முடிந்ததும், துணை வட்டாட்சியர் நிலை 2ஆக நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி நிறுவனத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சமூகப் பாதுகாப்பு திட்ட முன்னாள் துணை வட்டாட்சியர் சிவக்குமார் கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு  திட்ட துணை வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். திட்டக்குடி முன்னாள் வட்ட வழங்கல் அலுவலர் ராமர் காவல்துறை பயிற்சி முடிந்ததும், வேப்பூர் தலைைமயிடத்து துணை வட்டாட்சியராக பணி மாறுதல்  செய்யப்பட்டுள்ளார். புவனகிரி முன்னாள் மண்டல துணை வட்டாட்சியர்  சந்திரன், காவல் துறை பயிற்சி முடிந்ததும், ஆட்சியர் அலுவலகத்தில் பி பிரிவு தலைமை உதவியாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். திட்டக்குடி முன்னாள் தேர்தல் துைண வட்டாட்சியர் மஞ்சுளா காவல்துறை பயிற்சி முடிந்ததும், வேப்பூர் மண்டல துணை வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். விருத்தாசலம் மண்டல துணை வட்டாட்சியர் வேல்முருகன், விருத்தாசலம் தேர்தல் துணை வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் அலுவலக துணை வட்டாட்சியர் அசோகன், கடலூர் மண்டல துணை வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Cuddalore District 8 ,
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...