×

சாப்பிட சென்ற இடத்தில் ரகளை ஓட்டல் உரிமையாளர் ஊழியருக்கு அடி-உதை

கிருஷ்ணகிரி, டிச.16: கிருஷ்ணகிரி அருகே ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் உரிமையாளர், ஊழியரை சரமாரி தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே நரணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(41). இவர், குந்தாரப்பள்ளி -வேப்பனஹள்ளி சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இந்த ஓட்டலில், பெரியசூலாமலை ஆனந்தன்(28), பந்திகுறி வேலன்(31), சூலாமலை மாதவன்(45), தரணிசந்திரம் தமிழரசன்(24) ஆகிய 4 பேரும் சாப்பிட்டுள்ளனர். பின்னர், பணம் கொடுக்காமல் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களை ராஜா மற்றும் ஊழியரான இம்ரான்(34) ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.  ஆனால், 4 பேரும் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளனர். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆபாச வார்த்தையால் திட்டியதுடன், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து ராஜா மற்றும் இம்ரானை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிந்து ஆனந்தன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தார்.



Tags : hotel owner ,
× RELATED திருச்சியில் பெண்கள் குளிக்கும்போது...