×

கெலமங்கலம் அருகே ஏரி தூர்வாரும் பணி துவக்கம்

தேன்கனிக்கோட்டை, டிச.16: கெலமங்கலம் அருகே ஜங்கல்பாளையம் கிராமத்தில், ஏரியை தூர்வாரும் பணியை பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். கெலமங்கலம் அருகே, பொம்மதத்தனூர் ஊராட்சி ஜங்கல்பாளையம் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ், ₹8 லட்சம் மதிப்பில் ஏரியை தூர்வாரும் பணியை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்சியில் மாவட்ட விவசாய அணி ஸ்ரீதர், தொமுச கோபாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவராஜ், கிட்டண்ணா, ரங்கப்பா, பேவநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் ஆனந்த், வெங்கடராஜ், அப்பையா, ஆஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,lake ,Kelamangalam ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு