×

தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தென்காசி, டிச. 16: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை உடனே வாபஸ்பெறக்கோரி தென்காசியில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் செயல்படும்  தனியார் பெட்ரோல் பங்க்  முன் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துபாண்டியன், ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்துப் பேசினார். இதில் நிர்வாகிகள் ஜெயராஜ், கணபதி, வேல்முருகன், குணசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், லெனின் குமார், சங்கரி,  கிருஷ்ணன், வட்டாரச் செயலாளர் அயூப்கான், குருசாமி, வள்ளிநாயகம், ஆறுமுகம், ராதாகிருஷ்ணன், ராமசாமி, மகாவிஷ்ணு அழகேசன், அருணாசலம், கருப்பையா, கண்ணன், பாலு, ஆரிய முல்லை, மாரியப்பன், ரவி, பேச்சிமுத்து  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : demonstration ,Tenkasi ,
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து