×

முக்கூடலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பாப்பாக்குடி, டிச.16: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக முக்கூடலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற நிர்வாகிகள் உள்ளிட்ட 60 பேரை போலீசார் கைதுசெய்தனர்.  முக்கூடல் வம்பளந்தான் சந்திப்பு பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஸ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார். நெல்லை தொகுதி முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார், மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், மாணவர் அணி மாநில தலைவர் மாரிகுமார், மாநில தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.  இதையடுத்து அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி நிர்வாகிகள் உள்ளிட்ட காங்கிரசார் 60 பேரை முக்கூடல் போலீசார் கைது செய்தனர். முன்னதாக பாப்பாக்குடி ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் முக்கூடலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பாப்பாகுடி வட்டாரத் தலைவர் ஹரிநாராயணன், வக்கீல் ஆறுமுக பூபதி, நகரத் தலைவர் சரவணன் என்ற திரவிய சுப்பிரமணியன், பொன்ராஜ், கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Congress ,protest ,trio ,
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்