×

மெஞ்ஞானபுரம் அருகே வாகனம் மோதி எலக்ட்ரீஷியன் பலி

உடன்குடி,டிச.16: மெஞ்ஞானபுரம் அருகே வாகனம் மோதியதில் எலக்ட்ரீஷியன் பலியானார். மற்றொருவர் படுகாமடைந்து  சிகிச்சை பெற்று வருகிறார். மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ரவிகுமார்(36). உடன்குடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் சுந்தரேசன்(27) இருவரும் நண்பர்கள். வீடுகளுக்கு எலக்ட்ரீஷியன் வேலை பார்ப்பது உள்ளிட்ட பணிகள் செய்து வருகின்றனர்.  நேற்று காலை வழக்கம் போல் மெஞ்ஞானபுரம் வழியாக நாசரேத் பகுதிக்கு வேலைக்கு டூவிலரில் கிளம்பினர். சத்யாநகர் பகுதியில் வரும் போது எதிரில் வந்த வாகனம் மோதியதில் நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். ரவிகுமார் பலத்த காயமடைந்தார்.  அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags : Electrician ,vehicle collision ,Menjanpuram ,
× RELATED மின்வாரியத்திற்கும் இந்திய மரபுசாரா...