×

கார்த்திகை அமாவாசையையொட்டி ₹78.13 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

சேலம், டிச.15: கார்த்திகை அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் 231 டன் காய்கறிகள் ₹78.13 லட்சத்து விற்பனையானது. சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. நேற்று கார்த்திகை அமாவாசையையொட்டி 11 உழவர் சந்தைகளிலும் அகத்திக்கீரை, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பூசணிக்காய், வாழைப்பழம், வாழைஇலை  உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை நடந்தது. மொத்தம் 231 டன் 608 கிலோ காய்கறிகள், ₹78 லட்சத்து 13 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதிகபட்சமாக சூரமங்கலம் உழவர்சந்தையில் ₹14.81 லட்சத்துக்கும், தாதகாப்பட்டி உழவர்சந்தையில் ₹12.46 லட்சத்துக்கும் காய்கறி விற்பனையானது. அமாவாசையையொட்டி சேலம் பஜார் தெரு, குரங்குசாவடி மார்க்கெட், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், பால் மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் வழக்கத்தை விட காய்கறிகளின் விற்பனை அதிகமாக நடந்தது.

Tags : Karthika ,
× RELATED பள்ளி செல்லா குழந்தைகள் 18 பேர் கண்டறியப்பட்டனர் கல்வியை தொடர ஏற்பாடு