×

விக்கிரவாண்டி அருகே சோகம் செங்கல் சூளை குட்டையில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி

திண்டிவனம், டிச. 15: விக்கிரவாண்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் துளுகனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் முகேஷ்(10). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் விக்கிரவாண்டி அடுத்த வி.பகண்டை கிராமத்திற்கு தனது தந்தை பிரபாகரனுடன் வந்து மாமா வீட்டில் தங்கிவிட்டார். இந்நிலையில் மதியம் 2 மணியளவில் முகேஷ் அங்கிருந்த சிறுவர்களுடன் வாதானூரான் ஓடை பக்கம் சென்றுள்ளார். இரவாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர அங்கிருந்த சிறுவர்களை விசாரித்தபோது ஓடை பக்கமாக விளையாடியதாக கூறினர். இதனால் அங்கு சென்று தேடியபோது செங்கல் சூளைக்கு மண் எடுத்த குட்டையில் இருந்த நீரில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Vikravandi ,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...