×

வல்லம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு


செஞ்சி, டிச. 15: வல்லம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வல்லம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி யுவராஜ் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் திடீர் ேசாதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பணம் ₹73,200 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலர் கேத்ரின் சுமதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த திடீர் சோதனையால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை