×

3000க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்த்த அரசூர் கிளை நூலகத்திற்கு கேடயம் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

சாத்தான்குளம், டிச. 15: தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை உறுப்பினராக சேர்த்து மாநில அளவிலான விருதை வென்ற அரசூர் கிளை நூலகத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கேடயம் வழங்கிப் பாராட்டினார்.
 சாத்தான்குளம்  அருகே அரசூர் பூச்சிக்காடு கிராமத்தில் செயல்படும் கிளை நூலகத்தில் 3000க்கும் மேற்பட்டோரை  உறுப்பினர்களாக நூலகர் மாதவன் சேர்த்தார். இதையடுத்து இந்நூலகம் மாநில அளவில்  சிறந்த நூலகமாக தேர்வு  செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல் நூலகதத்துக்கான  விருதை நூலகர் மாதவனுக்கு  வழங்கினார். இதையடுத்து தூத்துக்குடியில்  நடந்த விழாவில் நூலகர் மாதவனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ  கேடயத்தை பரிசாக வழங்கிப் பாராட்டினார். இதில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ, கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட நூலகர் ராம்சங்கர் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். அரசூர் பூச்சிக்காடு நூலகர் மாதவன் இதுவரை 4முறை   நல்நூலகர் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விருதுபெற்றுள்ள மாதவனை  கிளை நூலகர்கள், மற்றும் பொதுநல அமைப்புகள்  நூலகர் மாதவனுக்கு பாராட்டு  தெரிவித்துள்ளனர்.

Tags : Kadambur Raju ,branch library ,Arasur ,
× RELATED கொளப்பள்ளி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்