×

வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு கோரி கோவில்பட்டி விஏஓ ஆபிசில் மனு அளிக்கும் போராட்டம்

கோவில்பட்டி, டிச.15: கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி விஏஓ அலுவலகத்தில் பாமக சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. விஏஓ அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்துக்கு நகரச் செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். நகரத் தலைவர் சேகர், நகர துணைத்தலைவர் கண்ணன், இளைஞர் அணி நகரச் செயலாளர் மோகன்ராம், நகர பொருளாளர் மனோரஞ்சிதம், நகர செயற்குழு உறுப்பினர் ராமலட்சுமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் விஏஓ நாகலட்சுமியிடம் மனு அளித்துச் சென்றனர்

Tags : office ,Vanni ,Kovilpatti VOO ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...