×

சிவகாசி அருகே விரிசல் கட்டிடத்தில் இயங்கும் விஏஓ ஆபீஸ்: பொதுமக்கள் அச்சம்

சிவகாசி, டிச. 15:  சிவகாசி அருகே விஏஓ அலுவலக கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் விஏஓ அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நிலங்களுக்கான பட்டா, சிட்ட அடங்கல் பெற விவசாயிகளும் மற்றும் பல்வேறு சான்றிதழ் பெற பொதுமக்களும் தினமும் வந்து செல்கின்றனர். பழமையான இக்கட்டிடம் கடந்த பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகி–்றது.  குறிப்பாக அலுவலகத்தின் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுகிறது.
இதனால் விஏஓ அச்சத்துடனே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மேலும் பல்வேறு தேவைக்கு வரும் பொதுமக்களும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு சேதமடைந்த விஏஓ அலுவலகத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘விஏஓ அலுவலகம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் அனைத்து தரப்பினரும் உயிருக்கு பயந்து ஒரு வித அச்சத்துடன் வந்து செல்கின்றனர் இதுவரை தணிக்கைக்கு வந்து செல்லும் உயரதிகாரிகளும் சரி, அவ்வழியே பயணிக்கும் அதிகாரிகளும் சரி கண்டுகொள்ளாதது வேதனையாக உள்ளது. எனவே, விபரீதம் நடக்கும் முன் பாழடைந்த விஏஓ அலுவலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : office ,VO ,crack building ,Sivakasi ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...