×

சிவகாசி கோப்பையநாயக்கன்பட்டியில் மயான பாதை, கொட்டகை கோரி மனு

விருதுநகர், டிச. 15: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சிவகாசி கோப்பைய நாயக்கன்பட்டி அருந்ததியர் தெரு மக்கள் அளித்த மனுவில், வேண்டுராயபுரம் ஊராட்சி கோப்பையநாயக்கன்பட்டி அருந்ததியர் காலனியில் 40 குடும்பங்கள் உள்ளன. மயானத்தில் கொட்டகை இல்லாததால் மழைக்காலத்தில் சடலங்களை எரிக்க முடியவில்லை. மயானம் செல்வதற்கு பாதையும் இல்லை. எனவே மயான சாலை,  கொட்டகை அமைத்து தர வேண்டும். மேலும் காலனியில் இருந்து மெயின் ரோடு செல்லும் பாதை சேறும், சகதியுமாக இருப்பதால் தரமான சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

Tags : Sivakasi Koppayanayakkanpatti ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்