×

ஆதிதிராவிட பள்ளி ஆசிரியர்களுக்கு அம்பேத்கர் பெயரில் விருது வழங்க வலியுறுத்தல்

தேனி, டிச. 15: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க மேற்கு மண்டல உயர்மட்ட குழு கூட்டம், தேனி அருகே குன்னூரில் நடந்தது. நிக்சன் தலைமை வகித்தார். தென் மண்டலச் செயலாளர் வரவேற்றார். மாவட்ட தலைவர் சேனாதிபதி முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் சண்முகசுந்தரம், மாநில இணைச்செயலாளர் செல்வகுமார், மாநில துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், கௌரவ ஆலோசகர் சுந்தரம், திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சங்க மாநில தலைவர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், ‘ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை 10 மண்டலங்களாக பிரித்து கல்வி சார்ந்த ஆய்வு அலுவலர்களாக 10 மண்டல உதவி இயக்குனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அனைத்து ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் கணிப்பொறி பாட வகுப்புகளை தொடங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், பள்ளிக்கல்வித் துறையை போல 9 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களையும் ஆசிரியரல்லாத பணியிடங்களையும் உருவாக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விருப்ப பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்த வேண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அம்பேத்கர் பெயரிலான விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

Tags : school teachers ,Ambedkar ,Adithravita ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா