×

தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, தேனிக்கு 2,500 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், ஆக.29: தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, தேனிக்கு 2,500 டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் அாிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் தலா 1,250 டன் அரிசி மூட்டைகள் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மற்றும் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Tags : Thanjavur ,Thoothukudi ,Theni ,Thanjavur district ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா