×

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பணியாளர்களை பிரதமர் காக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் திருப்பூரில் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பாதிப்படைந்துள்ளதால் உடனடி நிவாரணம் அளித்து தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை பிரதமர் காக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 16.8.2025 அன்று எழுதியுள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு தமிழ்நாட்டின், குறிப்பாக பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை காக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tiruppur ,US ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...