×

சென்டர் மீடியனில் இருந்த இரும்பு குழாய் குத்தி எலக்ட்ரீசியன் பலி

திருச்சி, டிச.15: திருச்சி புத்தூர் சாலைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மகன் விக்னேஷ்(25), எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரை பார்த்துவிட்டு ஓயாமரி மயானம் ரயில்வே மேம்பாலத்தில் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது ரயில்வே மேம்பாலத்தின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் இவரது பைக் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் சென்டர் மீடியனில் இருந்த இரும்பு குழாய் அவரது வயிற்றில் குத்தியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக இறந்தார். தகவலறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Electrician ,death ,
× RELATED தாம்பரம் அருகே வாங்கிய கடனுக்கு...