கொழும்பு: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை மீட்பதற்காக தமிழக மீனவர்கள் 15 பேர் கொண்ட குழு இலங்கை வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜேசுராசா தலைமையிலான 15 மீனவர்கள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஏழு படகுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். இவை கடந்த 2022ம் ஆண்டு விடுவிக்கப்பட்டவை. படகுகளின் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிபார்ப்பதற்காக மூன்று நாட்கள் அங்கிருக்கும் இந்திய மீனவர்கள் குழு அதன் பின்னர் இந்தியா திரும்பும்.
