×

பனிமூட்டத்தால் பயணிகள் அவதி

ஏற்காடு, ஆக.29: ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக, பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை நான்கு மணியிலிருந்து ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது. பனி மூட்டத்தால், சிறிது தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால் வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். நேற்று குறைந்த அளவே வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்த குளிர்ச்சியான சூழலை அனுபவித்து உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Tags :
× RELATED கார் மீது அரசு பஸ் மோதி விபத்து